Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரி வீரர்கள் உத்திரபிரதேசம் பயணம்

டிசம்பர் 05, 2022 03:15

புதுச்சேரி: உத்தரபிரதேசம் மாநில லக்னோவில் 17-வது இந்திய ஜூனியர் சாப்ட் டென் னிஸ் சாம்பியன் ஷிப் போட்டி வருகிற 9-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க புதுவை வீரர்கள் உத்தரபிரதேசம் புறப்பட்டு சென் றனர். இவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் விழா கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 

விழாவில் அணியினருக்கு புதுவை கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ரராஜன், சாப்ட் டென்னிஸ் சங்க செயலாளர் ரத்தினபாண்டியன், பயிற்சி யாளரும், புதுவை மாநில ரோகிட் பந்து கழக செயலாளருமான புருசோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு சீருடைய வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்